ADDED : பிப் 16, 2022 10:56 AM

நாயகம் வியாபாரிகளிடம் ஒட்டகம் ஒன்றின் விலையை கேட்டபோது, அவர்கள் விலையை சொன்னதுமே, அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்தபடி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார்.
“யார் இவர். பணம் தராமல் ஒட்டகத்தை தைரியமாக எடுத்துச் செல்கிறாரே'' என படபடப்புடன் கேட்டாள் ஒரு பெண்.
“பயப்படாதீர்கள். அவரது பேச்சில் உண்மை இருக்கிறது. நம்மை ஏமாற்றமாட்டார் என்று நம்பிக்கை உள்ளது'' என்றார் வியாபாரி.
அன்று மாலையே ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம்பழங்கள் அவர்களுக்கு வந்து சேர்ந்தன.
பார்த்தீர்களா... உண்மைக்கு எவ்வளவு சக்தி உள்ளது. உறவினர்கள், நண்பர்கள், சகபணியாளர்கள் என அனைவரிடமும் உண்மையாக இருங்கள். இப்படி செய்தால் உங்கள் மீதான மதிப்பு உயரும். பெரிய பொறுப்புகள் எல்லாம் உங்களைத் தேடி வரும். பொய் சிறிது நேரம் நீடிக்கும். உண்மை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

