sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

கடமையை செய்வேன்

/

கடமையை செய்வேன்

கடமையை செய்வேன்

கடமையை செய்வேன்


ADDED : ஆக 04, 2023 12:14 PM

Google News

ADDED : ஆக 04, 2023 12:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரக வழிபாட்டை நபிகள் நாயகம் கண்டித்தார். இதனால் குரைஷி இனத்தினர் கோபமுடன் இவரது பெரிய தந்தை அபூதாலிப்பிடம் சென்றனர்.

அவரிடம், ''உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளோம். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. உங்கள் தம்பியின் குமாரர் நம் முன்னோர்களை இகழ்ந்து பேசுகிறார். இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை தடுத்து நிறுத்துங்கள்'' எனக்கூறினர்.

அபூதாலிபுக்கு இது கவலையை உண்டாக்கியது. சமூகத்தாரைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதே சமயம் நபிகள் நாயகத்தை கைவிடவும் மனம் இல்லை. அவரிடம் ''உங்களுடைய புதிய கொள்கையை கைவிட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். என்னையும் காப்பாற்றுங்கள்'' என வேண்டினார்.

அதற்கு அவர், ''பெரிய தந்தையே. நீங்கள் எனக்கு உதவினாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி. எனக்கு உண்டான கடமையை கைவிடமாட்டேன். எனக்கு நபித்துவம் அருளிய இறைவன் இட்ட கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வேன்.

இதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை. அவன் எனக்கு நிச்சயமாக உதவி செய்வான்'' என்றார்.

இவரது மனஉறுதியை அறிந்த அபூதாலிப், ''நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு எல்லாவிதத்திலும் துணையாக இருப்பேன்'' என சொன்னார்.






      Dinamalar
      Follow us