sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

எல்லாருக்காகவும் பிரார்த்தியுங்கள்

/

எல்லாருக்காகவும் பிரார்த்தியுங்கள்

எல்லாருக்காகவும் பிரார்த்தியுங்கள்

எல்லாருக்காகவும் பிரார்த்தியுங்கள்


ADDED : பிப் 24, 2017 10:20 AM

Google News

ADDED : பிப் 24, 2017 10:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துஆ எனப்படும் பிரார்த்தனையைத் தொடங்கும் போது முதலில் அவரவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். அடுத்து பிறருக்காக பிரார்த்திக்க வேண்டும். குர்ஆனில் இப்ராஹிம் (அலை) அவர்கள், நூஹ் (அலை) அவர்கள் ஆகியோரின் பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.

* என் இறைவா! தொழுகையை நிலை நிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக. என் வழித்தோன்றல்களில் இருந்தும் தொழுகையை நிலை நாட்டுபவர்களை தோற்றுவிப்பாயாக. எங்கள் இறைவனே! மேலும், எனது இந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.

* எங்கள் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும், நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக. இவ்வாறு பிரார்த்திக்கும் போது குறுகிய நோக்கம் கூடாது. சுயநலத்துடன் செய்யும் பிரார்த்தனையால் பயன் இல்லை.

ஒருமுறை ஒரு கிராமவாசி மதீனாவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். 'இறைவா!

என் மீதும், நபிகள்நாயகம் மீதும் மட்டும் கருணை புரிவாயாக! மேலும், எம் இருவரைத்தவிர வேறு எவர் மீதும் கருணை பொழியாதே' என பிரார்த்தித்தார்.

இதனைக் கேட்ட நபிகள் நாயகம்,'இறைவனின் பரந்த கருணையை நீர் குறுகியதாக செய்து விட்டீர்' என்றார். எனவே, தொழுகையின் போது பரந்த

மனதுடன் துஆ செய்யுங்கள்.






      Dinamalar
      Follow us