நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''தன் அடிமை, பணியாட்கள் மீது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவன் சுவனத்தில் நுழையமாட்டான்'' என்றார் நபிகள் நாயகம்.
இதற்கு மக்கள், ''மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் இந்தச் சமுதாயத்தில் அடிமைகளும், அநாதைகளும் அதிகமாக இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லவில்லையா'' எனக் கேட்டனர்.
''ஆம். சொல்லி இருக்கிறேன். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகள் போல் அவர்களையும் உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவூட்டுங்கள்'' என்றார்.