ADDED : மார் 01, 2024 02:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணங்களில் வாக்களித்தபடி மஹர் தொகை கொடுத்து மணமகளை தேர்வு செய்து மணம் முடிக்கிறான் மணமகன். (மஹர் - திருமணத்தின் போது மணமகன் தர வேண்டிய தொகை) ஆனால் மஹர் தொகை தர வேண்டும் என்ற எண்ணம் மணமகனுக்கு இல்லாவிட்டால் அந்தப் பெண்ணை அவன் ஏமாற்றி விட்டதாகப் பொருள்.
மேலும் மஹர் தராத நிலையிலேயே அவன் இறந்தால் மறுமையில் கற்பழிப்பு செய்த குற்றவாளியாக நிறுத்தப்படுவான். எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது அவசியம்.