sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

பிறர் பற்றி ஆராயாதே!

/

பிறர் பற்றி ஆராயாதே!

பிறர் பற்றி ஆராயாதே!

பிறர் பற்றி ஆராயாதே!


ADDED : மார் 09, 2018 11:47 AM

Google News

ADDED : மார் 09, 2018 11:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடும்பத்திலோ அல்லது பணி இடத்திலோ பேசுவதை ஒட்டுக்கேட்டு, பிறரிடம் சொல்பவர்களை நபிகள் நாயகம் கண்டிக்கிறார். தங்கள் குடும்ப ரகசியம் வெளியே கசியக் கூடாது என நினைப்பவர்கள், தங்களுக்குள் மெதுவாக பேசுவர். ஒட்டுக்கேட்பவனின் காதில் அது அரைகுறையாக விழும். இதுபற்றி பிறரிடம் சொல்லும் போது, காதில் விழாத சந்தேகத்திற்குரிய வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்ல வேண்டி வரும்.

இப்படி வெளியில் கசியும் அந்த ரகசியம், சம்பந்தப்பட்ட குடும்பத்தையே அழித்து விட வாய்ப்புண்டு.

நாயகம் இதுபற்றி கூறும் போது, “நீங்கள் தவறான சந்தேகங்களை விட்டு, உங்களை காத்து கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படுகிற விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்து கொண்டு திரியாதீர்கள்.

பிறரைப் பற்றி துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். இறைவனின் அடியார்களாக விளங்கி, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்,” என்கிறார்.






      Dinamalar
      Follow us