
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த உலகில் யாருடைய ஆதரவும் இன்றி அனாதையாக வாழ்பவர்கள் பரிதாபமானவர்கள். இவர்களுக்கு தங்களின் எண்ணங்களை எடுத்துச் சொல்லக் கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களைப் பேணுவது நம் கடமை. எங்கு அனாதை குழந்தைகள் நல்ல விதமாக நடத்தப்படுகிறார்களோ அதுவே சிறந்த வீடாகும். எங்கு அனாதையை மோசமாக நடத்துகிறார்களோ அது கெட்ட வீடாகும்.
''அனாதைகளை அன்புடன் நடத்துங்கள். அவர்களை குடும்பத்தில் ஒருவராக கருதுங்கள். அவர்களுக்கு வயிறார உணவு கொடுங்கள்''