sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

கர்மா - துன்பத்தில் வைத்திருக்க ஏற்படுத்தப்பட்ட தந்திரமான சூழ்ச்சியா?

/

கர்மா - துன்பத்தில் வைத்திருக்க ஏற்படுத்தப்பட்ட தந்திரமான சூழ்ச்சியா?

கர்மா - துன்பத்தில் வைத்திருக்க ஏற்படுத்தப்பட்ட தந்திரமான சூழ்ச்சியா?

கர்மா - துன்பத்தில் வைத்திருக்க ஏற்படுத்தப்பட்ட தந்திரமான சூழ்ச்சியா?


PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேள்வி:


சத்குரு, அன்று நீங்கள் கர்மா பற்றி பேசும்போது, “ஒரு நபரின் கர்மாவை அவருக்குள் பதிவுசெய்ய மனம், உடல் மற்றும் சக்தி போன்ற பல செயல்முறைகள் உயிருக்கு உள்ளன” என்றீர்கள்; மனம் போனாலும் கூட, அது உடலிலும் சக்தியிலும் செதுக்கப்பட்டுவிடுகிறது. இது எல்லாவற்றையும் துன்பத்தில் வைத்திருக்க ஏற்படுத்தப்பட்ட மிகவும் விரிவான மற்றும் தந்திரமான சூழ்ச்சி போல் தெரிகிறது. ஏன் இப்படி?

சத்குரு:


பாருங்கள், நான் பேசும்போதெல்லாம், என் கர்மாவைப் பதிவுசெய்ய உங்களிடம் மூன்று பதிவு கருவிகள் உள்ளன. இது நான் என் வார்த்தையை மீற முடியாமல் இருப்பதை உறுதி செய்யும் ஒரு தந்திரமான சூழ்ச்சி. ஒரு கவனமற்ற தருணத்தில் நான் ஒரு வாக்குறுதி அளித்தால், நான் அதை மீற முடியாமல் இருப்பதை உறுதிசெய்ய உங்களிடம் மூன்று பதிவுகள் உள்ளன.

கர்மா என்பது நீங்கள் புரிந்துகொண்டது போல் அல்ல. அதில் எந்த தீமையும் இல்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அது உங்கள் கர்மாவினால் மட்டுமே. நீங்கள் பிறந்த க்ஷணத்திலிருந்து இந்த க்ஷணம் வரை, நீங்கள் செய்த, நினைத்த, உணர்ந்த மற்றும் அனுபவித்த அனைத்தும்தான் உங்கள் கர்மா. அதுதான் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது.

அதுதான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. எனவே கர்மா ஒரு தீய சூழ்ச்சி அல்ல. ஆம், இது ஒரு கட்டுப்பாடுதான், ஆனால் கர்மா ஒரு பாதுகாப்பும் கூட.

கர்மா தான் இப்போது உங்கள் உடல் இருப்புக்கான அடிப்படை. கர்மப் பதிவு இல்லையெனில், இந்த உடலுடன் உங்களை பிணைத்துக்கொள்ள முடியாது. கர்மா என்பது உங்களை இந்த உடலுடன் பிணைக்கும் சிமெண்ட் போன்றது. உங்கள் அனைத்து கர்மாவையும் நாம் அகற்றினால், இந்த க்ஷணமே நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்குவீர்கள், இப்போது அது எங்கள் கைகளில் வேண்டாம். எனவே, உங்கள் உடல், மனம், உணர்வு மற்றும் சக்தி ஆகிய அனைத்து நிலைகளிலும், உங்களைப் பற்றிய எதுவும் ஒருபோதும் இழக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவே இந்த பதிவுகள் நடைபெறுகின்றன.

உங்களில் மிக அடிப்படையான உள்ளுணர்வு சுய-பாதுகாப்பு. உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு சுவரைக் கட்டினீர்கள், மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த சுவரையும் அது தந்த பாதுகாப்பையும் நீங்கள் அனுபவித்தீர்கள். ஆனால் உங்களில் வரம்பற்ற முறையில் விரிவடைய விரும்பும் மற்றொரு பரிமாணமும் உள்ளது. இப்போது, உங்களின் அந்தப் பரிமாணம் திடீரென இந்தச் சுவர் ஒரு சிறைச்சாலை என்று சொல்லத் தொடங்குகிறது. அது சுவரை உடைத்து செல்ல விரும்புகிறது. ஆனால் சுய-பாதுகாப்புக்காகப் போராடும் உங்களின் மற்றொரு பகுதி சுவரை வலுப்படுத்த விரும்புகிறது. அது சுவரை மேலும் மேலும் தடிமனாக்க விரும்புகிறது. ஒரு மனிதனைப் பார்த்தால், சார்லஸ் டார்வினின் கோட்பாட்டின்படி சென்றாலும் கூட, உங்கள் வரலாறு விலங்கு இயல்பு தான்; ஆனால் உங்களில் தொடர்ந்து விரிவடைய ஏங்கும் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த ஏக்கத்தைப் பார்த்தால், அது எந்த புள்ளியிலும் முடிவடையப் போவதில்லை என்பதைக் காணலாம். அது வரம்பற்றதாக மாறினால் தவிர திருப்தி அடையாது.

கர்ம மாளிகை


உங்கள் வரலாறு விலங்கு இயல்பு. உங்கள் எதிர்காலம் தெய்வீகத்தன்மை. இப்போது நீங்கள் ஊசலாட்டம் போல இரண்டுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் ஒரு பகுதி, உங்களுக்குள் உள்ள வலுவான உள்ளுணர்வான சுய பாதுகாப்பு. உங்களில் மற்றொரு பகுதி அனைத்து வரம்புகளையும் உடைக்க ஏங்குகிறது. கர்மா என்பது சுய பாதுகாப்பின் சுவர். ஒரு காலத்தில் நீங்கள் அதை மிகுந்த கவனத்துடன் கட்டினீர்கள், ஆனால் இப்போது நீங்கள் உங்களுக்குள்ளே சிறைப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்கள். கர்மா என்பது சுய சிறைப்படுத்தலின் மாளிகை. உங்களால் அதனுடன் இருக்க முடியாது; அது இல்லாமலும் இருக்க முடியாது, அதுதான் பிரச்சனை. எனவே இப்போது நீங்கள் உங்கள் சிறையின் அளவை விரிவுபடுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் ஒருவேளை நாங்கள் உங்களை 5 × 5 சிறிய அறையில் பூட்டி வைத்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் விருப்பப்படி அல்லாமல் உங்களை அங்கே முழுமையாக பூட்டி வைத்தால் - அப்போது நீங்கள் சுதந்திரத்திற்காக ஏங்குவீர்கள். உங்கள் சுதந்திரம் பற்றிய எண்ணம் ஆசிரமத்தின் சுவர்களாக, அதாவது வேலியாக இருக்கும்.

உங்களை அதிலிருந்து விடுவித்தால், அது மிகப்பெரிய சுதந்திரம் போல் தோன்றும், ஆனால் மூன்று நாட்களுக்குள் நீங்கள் மலைகளைப் பார்ப்பீர்கள், வானத்தைப் பார்ப்பீர்கள், நுழைவு வாயிலைப் பார்ப்பீர்கள், உங்கள் சுதந்திரம் பற்றிய எண்ணம் ஆசிரமத்தின் வாயிலிலிருந்து வேறு ஏதோ ஒன்றாக விரிவடையும். சரி, நீங்கள் தாணிக்கண்டி வரை சென்று வரலாம் என்று நாங்கள் சொல்வோம். அது சிறிது காலம் அற்புதமான சுதந்திரமாகத் தெரியும், ஆனால் பிறகு நீங்கள் கோயம்புத்தூர் செல்ல விரும்புவீர்கள். கோயம்புத்தூருக்கு போதுமான பயணங்களை மேற்கொண்டால், கோயம்புத்தூர் போதாது என்று உணர்வீர்கள். பாரம்பரிய ஆன்மீகத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட சிலர் இமயமலைக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இல்லையெனில், நீங்கள் பெரிய நகரத்திற்கோ அல்லது வேறு எங்காவதோ செல்ல விரும்புவீர்கள். எனவே உங்கள் சிறைப்படுத்தப்பட்ட எண்ணம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. சுதந்திரம் பற்றிய உங்கள் எண்ணமும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது.

வாழ்க்கையை படிப்படியாக புரிந்துகொள்ள ஏன் ஒரு வாழ்நாள் முழுவதும் செலவிட்டு, இறுதியில் ஒரு முட்டாளைப் போல உணர்ந்து இறக்க வேண்டும்? இது பற்றி பார்ப்பதற்கான நேரம் இதுதான். உங்களது சுதந்திரம் பற்றிய கருத்து எல்லையற்றது. உங்கள் இருப்பு எல்லையற்ற தன்மையை விட குறைவான எதையும் ஏற்றுக்கொள்ளாது. உங்களை நீங்களே பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.

நீங்கள் எல்லையற்றவராக மாற விரும்பினால், உடல்ரீதியான தடைகளை உடைப்பது உங்களை எல்லையற்றவராக மாற்றாது, ஏனெனில் உடல்ரீதியானது ஒருபோதும் எல்லையற்றதாக இருக்க முடியாது. உடல்ரீதியான யதார்த்தத்தின் வரம்புகளைக் கடந்து, உடல்ரீதியான இருப்பையே தாண்டிச் சென்றால் மட்டுமே எல்லையற்ற தன்மைக்கான வாய்ப்பு உள்ளது.

தேர்வின் மூலம் வாழ்தல்


கர்மா என்பது உங்களை உடலில் வேரூன்றச் செய்வது. இது இல்லாமல், வேரூன்ற வழியே இல்லை. எனவே இயற்கை அல்லது படைத்தல், நீங்கள் செயல்படுவதற்கு அடித்தளம் ஒன்று இருப்பதை உறுதி செய்கிறது. உடலைப் பற்றிக்கொள்ளாமல் தேடல் என்பதே இல்லை. உடலற்ற உயிர் தேர்ந்தெடுத்து தேடுதலில் ஈடுபட முடியாது. அவர் குறிப்பிட்ட நிலைக்கு வளர்ச்சி அடையாத வரை, போக்குகளின் மூலமாக மட்டுமே தேடுதலில் ஈடுபட முடியும், தேர்வின் மூலம் அல்ல. ஆனால் உடலுடன் இருக்கும் உயிருக்கு, உண்மையில் ஒவ்வொரு க்ஷணமும் தேர்வுதான். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், ஒவ்வொரு க்ஷணமும் தேர்வின் மூலமாகவே இருக்கிறது.






      Dinamalar
      Follow us