sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

வளர்த்த கடா!

/

வளர்த்த கடா!

வளர்த்த கடா!

வளர்த்த கடா!


PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மாமன், மச்சான் என கூறி உதவி தேடி வருபவர்களை இனி பக்கத்திலேயே சேர்க்கக் கூடாது...' என, எரிச்சலுடன் கூறுகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்து, தன் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார், லாலு பிரசாத் யாதவ்.

ஆனால், அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வேலையை, அவரது உறவினர்களே ஜோராக செய்து வருகின்றனர்.

லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் சகோதரர் சுபாஷ் யாதவ், சமீபத்தில் ஒரு அணுகுண்டை துாக்கி வீசினார்...

'லாலு பிரசாத் ஏற்கனவே முதல்வராக பதவி வகித்தபோது, ஆட்களை கடத்தி செல்லும் மாபியா கும்பல்களுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தார்.

'ஆள் கடத்தல் வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரிக்கப்படுவதற்கு பதிலாக, முதல்வர் அலுவலகத்தில் தான் விசாரிக்கப்பட்டன. இந்த மறைமுக பேரத்தில் லாலுவுக்கு பணம் கொட்டியது. இதற்கெல்லாம் நானே நேரடி சாட்சி...' என, அவர் தெரிவித்தார்.

இதனால் கடுப்பான லாலு, 'சொந்தக்காரர்கள் என்று அரவணைத்தது தவறு என்பது இப்போது தான் தெரிகிறது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக இருக்கிறது...' என, புலம்புகிறார்.






      Dinamalar
      Follow us