sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

இந்த பதவிக்கும் வேட்டு?

/

இந்த பதவிக்கும் வேட்டு?

இந்த பதவிக்கும் வேட்டு?

இந்த பதவிக்கும் வேட்டு?


PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கட்சிக்குள் உள்ள பஞ்சாயத்தையே தீர்த்து வைக்க முடியவில்லை; இதில், புது பஞ்சாயத்து வேறா...?' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ஏக்நாத் ஷிண்டே, தன் முதல்வர் பதவியை பா.ஜ.,வின் தேவேந்திரபட்னவிசிடம் தாரைவார்க்க வேண்டி இருந்தது.

இதனால், சோகத்தில் மூழ்கியுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இந்த நிலையில் தான், 'மஹாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்து வரும் அன்னதான திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் சிர்சத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

'தினமும் இலவசமாக சாப்பாடு போடுவதால், ஷீரடியில் பிச்சைக்காரர்கள் அதிகரித்து விட்டனர்; இவர்களால் குற்றங்களும் அதிகரித்து விட்டன...' என்கிறார், சஞ்சய் சிர்சத்.

இதற்கு, ஷீரடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ண விகேஷ் பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'தேவையில்லாத விஷயங்களை பேசினால், கூட்டணியே முறிந்து விடும்...' என, பாட்டீல் எச்சரித்துள்ளார்.

இதை பார்த்த ஏக்நாத் ஷிண்டே, 'துணை முதல்வர் பதவிக்கும் வேட்டு வைத்து விடுவர் போலிருக்கிறதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.






      Dinamalar
      Follow us