PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

'ஹிந்துக்கள் மீது இவருக்கு அப்படி என்ன வெறுப்பு என்று தெரியவில்லையே...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித் தராமையா பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், பா.ஜ.,வினர்.
நாட்டில் உள்ள மூத்தஅரசியல்வாதிகளில் ஒருவரான சித்தராமையா, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஹிந்து மதத்தில் சமத் துவ மின்மை நிலவு கிறது. அதனால் தான், அந்த மதத்தில் இருந்து குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள்,வேறு மதத்துக்கு மாறுகின்றனர்.
'மதம் மாறும்படி, யாரும், யாரையும் கட்டாய ப்படுத்துவது இல்லை. தாங்களாகவே முன் வந்து மதம் மாறுவது மக்களின் உரிமை; இதை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது...' என்றார்.
சித்தராமையாவின் பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அசோக், 'எல்லா மதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதற்காக, ஹிந்து மதத்தை மட்டும் குறிப்பிட்டு விமர்சிப்பது, சித்தராமையா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
'சித்தராமையாவுக்கு துணிச்சல் இருந்தால், சிறுபான்மை மதங்களில் உள்ள பிரச்னைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விமர்சித்து பார்க்கலாமே...' என, ஆவேசத்துடன் தெரிவித்தார்.
காங்., தலைவர்களோ, 'வாயை கொடுத்து வாங்கி கட்டுவதே சித்தராமையாவுக்கு வேலையாக போய் விட்டது...' என, புலம்புகின்றனர்.