sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

 தவறான முடிவு!

/

 தவறான முடிவு!

 தவறான முடிவு!

 தவறான முடிவு!


PUBLISHED ON : ஜன 20, 2026 02:14 AM

Google News

PUBLISHED ON : ஜன 20, 2026 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நடக்கும் சம்பவங்களை பார்த்தால், மிகவும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது...' என்கின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.

இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மற்ற மாநிலங்களை போலவே, தெலுங்கானாவிலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த அபராத தொகையை செலுத்தும்படி, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, மொபைல் போன் வாயிலாக, 'சம்மன்' அனுப்பப்படுகிறது. போக்குவரத்து போலீசார், இவர்களிடம் நேரில் சென்று அபராதத்தை வசூலிக்க முடியாது. 'ஆன்லைன்' வாயிலாகவே அபராத தொகையை இவர்கள் செலுத்த வேண்டும்.

இதனால், பெரும்பாலானோர், அபராத தொகையை செலுத்தாமல் பல மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளனர். இந்த விவகாரம், முதல்வர் ரேவந்த் ரெட்டி கவனத்துக்கு சென்றது. அவர், அபராதத்தை வசூலிப்பதற்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, குறிப்பிட்ட தேதிக்குள் அபராத தொகையை முழுமையாக செலுத்துவோருக்கு, அபராதத்தில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என, அறிவித்தார்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாகன ஓட்டிகளில் பலர், 'இன்னும் சில நாட்கள் அபராதத்தை செலுத்தாமல் இருந்தால், அபராத தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது' என கருதி, இழுத்தடித்து வருகின்றனர்.

அதிகாரிகளோ, 'முதல்வர் தவறான முடிவை எடுத்து விட்டாரே...' என, புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us