PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM
இலை சுடுவதில்லை ஏன்
சுட்டெரிக்கும் வெயிலில் காகிதத்தையோ, உலோகத்தையோ சிறிது நேரம் வைத்தால் விரைவில் சூடாகி விடுகிறது. ஆனால் எவ்வளவு வெயில் அடித்தாலும்,மரத்தின் இலைகள் மட்டும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரணம் இலைகளிலுள்ள இலைத் துளைகள் தான். இலைத்துளைகள் மூலமாக எப்போதும்ஓரளவு நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் இலை பசுமையாக காணப்படுகிறது. மேலும் நீர் ஆவியாகி செல்லும்போது, இலைகளில் உள்ள வெப்பத்தை ஓரளவு எடுத்துச் செல்வதால் இலைகள் குளிர்ச்சியாக இருக்கின்றன.
தகவல் சுரங்கம்
உலக ஊதா தினம்
உலகில் 6.5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர நாடுகளில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 1.5 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளை நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பால் வலிப்பு ஏற்படுகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 26ல் உலக ஊதா தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையளித்தால், அதில் இருந்து மீள முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

