PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
இஸ்ரோ 'நுாறு' எப்படி
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சமீபத்தில் நுாறாவது ராக்கெட் ஏவி சாதித்தது. 1975 ஏப்.19ல் தன் முதல் செயற்கைக்கோளை (ஆர்யபட்டா), ரஷ்ய ராக்கெட்டில் விண்ணில் செலுத்தியது. 1979 ஆக.10ல் முதல் ராக்கெட் பயணத்தை தொடங்கியது. பெயர் 'எஸ்.எல்.வி.-3இ1'. இதில் 'ரோஹிணி' செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவியது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. இதன்பின் ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி.,எஸ்.எஸ்.எல்.வி., என பல்வேறு ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது.
