PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிக நேரம் வேலையா...
நீண்ட நேரம் பணியாற்றுவோருக்கு மூளை செயல் திறன் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இது அவர்களது உணர்ச்சி கட்டுப்பாடு, ஞாபகசக்தி, முடிவெடுக்கும் திறமையை பாதிக்கும் என தென் கொரிய ஆய்வு தெரிவித்துள்ளது. வாரத்துக்கு 52 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் 32 பேர், சரியான நேரம் பணியாற்றும் 78 பேரிடமும் மூளை செயல்பாடு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிக நேரம் பணியாற்றுபவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதை தவிர்க்க போதுமான ஓய்வு, துாக்கம், உடற்பயிற்சி அவசியம் என தெரிவித்துள்ளனர்.