PUBLISHED ON : பிப் 25, 2026 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானில் ஒரு ரத்த நிலா
ஒரே நேர்கோட்டில் சூரியன் - நிலவு இடையே பூமி வரும் போது, சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான் நிலவில் படுகிறது. இதுதான் சந்திர கிரகணம். மார்ச் 3ல் நிகழும் இந்த சந்திர கிரகணத்தின் சிறப்பு, அன்றைய தினம் பூமி - நிலவு இடையேயான துாரம் சராசரியை விட (3,84,000 கி.மீ.,) குறைவாக இருக்கும். இதனால் பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறும் சூரிய ஒளியில், அதிக அலை நீளமுள்ள சிவப்பு, நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' எனப்படுகிறது.

