sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

/

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மார் 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 29, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

எதிரொலிக்கு காரணம்

காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 1080 அடி. ஒலியலைகள் சற்றுத் தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளின் மீது மோதி நமது திசை நோக்கிப் பிரதிபலிப்பதே எதிரொலி. அதாவது ஒலிபடும் பொருள், ஒலியைக் கிரகிக்கும் தன்மை இல்லாமல் பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். பிரதிபலிக்கும் பொருள் நம்மிடம் இருந்து பொதுவாக 56 அடிக்கு தொலைவில் இருந்தால் தான் எதிரொலி கேட்க வாய்ப்பு உருவாகும். மலைப்பகுதிகளில் சத்தமிடும்போது பாறை போன்றவை 56 அடிக்கு அடுத்து இருப்பதால் அதன் மீது பட்டு ஒலி எதிரொலிக்கிறது.

தகவல் சுரங்கம்

எப்போதும் தண்ணீர்

அதிக ஆழம் இல்லாத, பரந்து விரிந்து காணப்படும் நீர்நிலை பகுதி தான் சதுப்பு நிலம். இது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் காணப்படும். சிறு தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக உள்ளது. பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கும். இவை நிலத்தடி நீர் வளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிகளவில் நீரை தக்கவைத்துக்கொண்டு வெள்ளப் பாதிப்புகளை தடுக்கிறது. பழவேற்காடு, பள்ளிக்கரணை, பிச்சாவரம், கோடியக்கரை போன்றவை தமிழகத்தில் உள்ள முக்கிய சதுப்பு நிலப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us