sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜூலை 22, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 22, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விலை உயர்ந்த நடவு



ஜூலையில் கள்ளந்திரியில் நெல்லுக்கான நடவு நடப்பதைப் போன்று, காஷ்மீரில் குங்குமப்பூவுக்கான நடவு நடைபெறும்.

ஜூலை இறுதி வாரத்தில் துவங்கி, ஆகஸ்ட் மாத இறுதி வரை குங்குமப்பூவுக்கான நடவு காஷ்மீரில் நடைபெறும். இந்தியாவில் விவசாயம் மூலமாக உற்பத்தியாகும் பொருட்களிலேயே, மிகவும் விலை உயர்ந்த பொருள் குங்குமப்பூ ஆகும். ஒரு கிலோ குங்குமப்பூ எடுக்க, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பூக்கள் தேவைப்படும். எனவே தான் இந்திய வேளாண்மை அமைச்சகம், குங்குமப்பூ விவசாயத்திற்கான நடவு முறையை, 'விலை உயர்ந்த நடவு' என அழைக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினால் நடவு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. கிடைக்கும் ஆட்களின் கூலியும் அதிகமாக உள்ளது. எனவே குங்குமப்பூ நடவு மட்டுமின்றி,நெல் நடவே 'விலை உயர்ந்த நடவாக மாறி விட்டது' என விவசாயிகள் கூறுகின்றனர். ஜூலை மாதம் நடவு செய்யும் குங்குமப்பூ, அக்டோபரில் அறுவடைக்குத் தயாராகும்.



தகவல் சுரங்கம்



ஊருக்குப் பெருமை



தமிழக அரசு, நிலம் இல்லாத ஏழை விவசாயி களுக்கு, ஜெர்சி மாடுகளை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. காங்கேயம் காளைகள், ஓங்கோல் மாடுகளைப் போன்று, ஜெர்சி மாடுகள் ஊரால் சிறப்பு பெற்ற மாடுகளாகும். பிரிட்டனில் உள்ள 'பிரிட்டிஷ் சேனல்' பகுதியில் உள்ள தீவே 'ஜெர்சி' ஆகும். ஜெர்சி மாடுகள் இங்கு தான் கலப்பினம் செய்யப் பட்டன. எனவே ஜெர்சி மாடுகள் என பெயர் பெற்றன. இந்த வகை மாடுகள், மற்ற வகை மாடுகளை விட எடை குறைவாக உள்ளன. ஜெர்சி பசுவின் அதிகபட்ச எடை 540 கிலோவாகும். எனவே ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு இவற்றை கொண்டு செல்வது எளிதாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கப்பல்களில் கொண்டு வரப்பட்டு ஜெர்சி பசுக்களும், காளை களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் பாலில் மற்ற பசுக்களின் பாலை விட, கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். எத்தகைய தட்பவெப்ப நிலையையும் ஏற்று வளரும் ஜெர்சி பசுக்கள் இந்திய காளைகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு புதிய வகைகள் தோன்றின.








      Dinamalar
      Follow us