sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜன 17, 2018 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 17, 2018 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராமியத் தப்பாட்டம்

பறை முழக்கம் தற்போது தப்பாட்டம் என அழைக்கப்படுகிறது. 'தப்புதல்' என்றால் 'அடித்தல்' என ஒரு பொருள் உள்ளது. அடித்தலோடு ஆட்டமும் சேர்ந்து வருவதால், இது தப்பாட்டம் எனப் பெயர் பெற்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை திணைகளுக்கும், ஐந்து வகை பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது. திருமணம், கோயில், இறப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தப்பாட்டங்கள் உள்ளன. மற்ற கிராமியக் கலைகளில் ஒருவர் இசைக்க மற்றொருவர் தான் ஆடுவர். தப்பாட்டத்தில் மட்டும் தான், ஆடுபவரே இசைக்க வேண்டும்.

தகவல் சுரங்கம்

இலங்கையின் பழைய தலைநகரம்

இந்தியாவில் இருந்த அரசன் விஜயன், இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட ஊர் தான் இன்றைய இலங்கையின் அனுராதபுரம். அனுராதபுரம் தான் இலங்கையின் பழைய தலைநகராக இருந்தது. உலகில் மனிதர்களால் நடப்பட்ட மிகவும் பழமையான மரம், அனுராதபுரத்தில் உள்ளது. அசோகர் தன் மகள் சங்கமித்திரையை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரவச் செய்தார். அப்போது போதிமரத்தின் கிளையை, அனுராதபுரத்தில் புனித மரமாக நடச் செய்தார். அந்த மரம் தற்போதும் அனுராதபுரத்தில் பவுத்தர்களால் வழிபடப்படுகிறது.






      Dinamalar
      Follow us