உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 16, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
ஆக்சிஜனை பிரித்தெடுப்பது எப்படி
நாம் சுவாசிக்கும் போது வாயுக்களின் கலவை காற்றுதான் நுரையீரலுக்குள் செல்கிறது. இவை 'ஆல்வியோலி' எனும் மூச்சுச் சிற்றறைகளுக்குள் புகும். அந்த நுண்ணறைகளின் உட்சுவரில் சிறுசிறு ரத்த நுண் குழாய்கள் இருக்கும். இவை காற்றில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளை, ரத்தத்தில் கலக்கச் செய்யும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் ஆக்சிஜனைக் கவர்ந்து பற்றிக்கொள்ளும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, நுரையீரலுக்குள் வந்துவிடும். இவ்வாறு தான் காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நுரையீரல் பிரித்தெடுத்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
