உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பனியில்லாத ஆர்க்டிக்
பருவநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்த வெப்பநிலை, அதிக மழை, வறட்சி என உலகம் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வெப்பநிலை கூடுதலாக 2.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், கோடையில் ஆர்க்டிக் பகுதி முற்றிலும் பனி இல்லாத பகுதியாக மாறி விடும் என கனடாவின் மனிடோபா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதியில் வெப்பநிலை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது கிரீன்லாந்து தீவில் பனிக்கட்டி உருகுவதற்கும் காரணமாக அமைகிறது. பூமியின் வட முனையில் ஆர்க்டிக் பகுதி அமைந்துள்ளது.
