/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தாவரங்கள் துாங்குமா...
/
அறிவியல் ஆயிரம் : தாவரங்கள் துாங்குமா...
PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தாவரங்கள் துாங்குமா...
மூளை, மத்திய நரம்பு மண்டலம் உள்ள உயிரினங்களுக்கு துாக்கம் அவசியம். தாவரங்களுக்கு இவை இல்லை. அவை நடப்பது, ஊர்வது, பறப்பதில்லை. எனவே துாக்கம் தேவைப்படுவதில்லை என்பதே விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால் தாவரங்கள் சூரிய ஒளி மூலம் பச்சையம் தயாரிக்கும் வேலையை பகலில் செய்துவிட்டு, இரவில் செயல்பாடுகளை குறைத்துக் கொள்கின்றன. குளுகோஸ், கார்பன் போன்றவை தாவரத்தின் உடலெங்கும் கடத்தப்படுவது இரவிலும் நடக்கிறது. பகலிலும், இரவிலும் செயல் வேறுபடுவதை தாவரங்களின் 'ஓய்வு' என சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

