உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 28, 2025 11:43 PM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
ஒலி உருவாவது எப்படி
காற்றில் வேகமாகக் நம் கையை அசைத்தால் ஒருவித சத்தம் எழும். இவ்வாறு காற்றில் அழுத்த அலைகளை ஏற்படுத்துவதன் மூலமே அனைத்துவித சத்தங்களும் (ஒலி) ஏற்படுகின்றன. வீணையின் கம்பிகளை மீட்டும்போது இசை எழும். அதுபோல நாம் சுவாசிக்கும் காற்றானது நுரையீரலில் இருந்து வெளியேறும் போது, குரல்வளையில் உள்ள குரல் நாண்களை அதிர்வடைய செய்கிறது. இதன்மூலம் பேசும் போது சத்தம் உருவாகிறது. வாய், நாக்கு, மூக்கு, உதடு உள்ளிட்ட உறுப்புகளை குவித்து விரித்து செயல்படுத்தும்போது பேச்சு உருவாகிறது.
