/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்
/
அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்
PUBLISHED ON : மார் 08, 2026 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேதியியலுக்கான நோபல் பரிசு (2025) வென்றவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் உமர் யாஜி. இவர் பாலைவனத்தில் வறண்ட காற்றில் இருந்து தண்ணீர் பெறும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.
காற்றின் ஈரப்பதம் 20% இருந்தாலும் வேலை செய்யும். இது சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும். இதன்மூலம் ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதிக நுண்துளைகள் கொண்ட உலோக- கரிம கட்டமைப்புகளில் இயங்கும் இந்த தொழில்நுட்பம், குறைந்த ஈரப்பதம் உள்ள சூழல்களில் கூட நீராவியை ஈர்த்து தண்ணீரை எடுக்கும் திறன் உடையது என தெரிவித்துள்ளனர்.

