PUBLISHED ON : ஜூலை 11, 2026 11:18 PM

நாட்டை வலுப்படுத்தும் நிலையான குரலாய் உள்ள தினமலர் நாளிதழ் தன் 75-வது ஆண்டு சாதனையை எட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
வாசகர்களின் மனதில் தினமலர் நாளிதழ் ஏற்படுத்திய சமூக பொறுப்பு சார்ந்த விழிப்புணர்வின் தாக்கம் வலிமையானது. உண்மை நேர்மை பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செய்திகளை வழங்குவதுடன் இளைஞர்கள் ,பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான வேலை தகவல்கள்ல போட்டி தேர்வு குறித்த வழிகாட்டல்கள் , சமூக விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் உலக முன்னேற்றங்கள் குறித்து தினமலர் வெளியிடும் தகவல்கள் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் முக்கிய ஆதாரமாக செயல்படுகின்றன. தங்களின் பணி என்றென்றும் பாரட்டத்தக்கது.
இந்த 75 ஆண்டு கால சிறப்பான பயணமானது ஆசிரியர், பதிப்பாளர், ஆசிரியர் குழு மற்றும் பணியாளர்கள் அனைவரின் அர்ப்பணிப்பு ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியின் பிரதிபலிப்பாகும்.
இந்த முக்கியமான தருணத்தில் தினமலர் நாளிதழ் மென்மேலும் பல சாதனைகளை எட்ட தொடர்ந்து மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தி சமூக முன்னேற்றத்திற்கும், நாட்டின் வலிமைக்கும் பெரும் பங்களிப்பைப வழங்கி மக்களுக்கான சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு சிறப்பாக செயல்பட என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
க.விக்னேஷ்
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர்
தமிழக அரசு
