/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
நம்பிக்கைக்குரிய குரல் 'தினமலர்'
/
நம்பிக்கைக்குரிய குரல் 'தினமலர்'
PUBLISHED ON : மார் 01, 2026 12:13 AM

'தினமலர்' 75 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, தினமலர் குடும்பம் முழுவதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல தசாப்தங்களாக, தமிழ் ஊடக உலகில், தினமலர் ஒரு வலிமையான, நம்பிக்கைக்குரிய குரலாக திகழ்ந்து வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை, கவலைகள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை, மிகுந்த தெளிவுடனும் பொறுப்புடனும் பிரதிபலிக்கும் ஊடகமாக, மக்களுக்கு நெருக்கமாக இருந்து செயல்பட்டு வருகிறது.
உண்மையை அடிப்படையாகக் கொண்ட செய்திகளை வழங்குதல் மற்றும் அச்சமற்ற பத்திரிகை பணி இவைதான் தினமலரின் தனித்துவங்கள். தேவையான போது, அதிகாரத்தில் இருப்பவர்களிடமும் கேள்விகளை எழுப்பி, சமூக பிரச்னைகளை முன்வைத்து, பொதுநலனுக்காக உறுதியாக நிற்பதன் மூலம், பல தலைமுறைகளாக வாசகர்களின் நம்பிக்கையை அது பெற்றுள்ளது.
சொல்லப்படும் விஷயத்தை விட, அதை விரைவாக சொல்லுதலே முக்கியமாக கருதப்படும் இன்றைய காலகட்டத்திலும், ஒழுக்கம், நெறி மற்றும் சீரான நிலைப்பாட்டுடன் தினமலர் தனது பணியை மேற்கொண்டு வருகிறது. வலுவான பத்திரிகை விழுமியங்களை பாதுகாத்து, அதே சமயம் காலத்திற்கேற்ற வகையில் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது பாராட்டுக்குரியது.
நம்பிக்கை மற்றும் நீண்டகால உறவுகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களை மிகவும் மதிக்கும் நான், பொதுமக்களிடையே அறிவார்ந்த அபிப்பிராயங்களை உருவாக்குவதிலும், ஜனநாயக மதிப்பீடுகளை வலுப்படுத்துவதிலும் தினமலர் ஆற்றிய பங்கை உணர்ந்து, மிகவும் பாராட்டுகிறேன்.
வலுவான நம்பிக்கையால் உருவாகியுள்ள தினமலரின் வாசகர் வட்டம் எங்கும் பரந்து விரிந்துள்ளது. அதனால், சங்கீதா போன்ற நிறுவனங்கள் பெரும்பாலான மக்களுடன் அர்த்தமுள்ள மற்றும் பொறுப்பான முறையில் தொடர்புகொள்ள தினமலர் பெருமளவில் உதவியுள்ளது.
இந்த முக்கியமான மைல்கல்லை தினமலர் கொண்டாடும் வேளையில், அதன் தொடர்ந்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உண்மை, நேர்மை மற்றும் தைரியத்துடன் சமூகத்தை வழிநடத்தும் தனது பணியை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
மனப்பூர்வமான வாழ்த்துகளுடன்,
சுபாஷ் சந்திரா. எல்
மேலாண்மை இயக்குனர், சங்கீதா மொபைல்ஸ் பி., லிட்.

