PUBLISHED ON : மார் 23, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர்.
அதனால் பள்ளி நேரத்தில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் டூ வீலரில் பள்ளிக்குள் செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

