PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கிழவனேரியில் ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் ஏப்.,23 ல் மறியலில் ஈடுபட்டனர்.
அப்பிரச்னை குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்ததில் குடிநீர் குழாய் உடைப்பு கண்டறியப்பட்டது.
அதனை சரி செய்து தற்போது குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருவதாகவட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் தெரிவித்தார்.

