/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் தினமலர் செய்தி எதிரொலி
/
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் தினமலர் செய்தி எதிரொலி
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் தினமலர் செய்தி எதிரொலி
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : மார் 22, 2024 12:00 AM

ராமேஸ்வரம்:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் ரதவீதியில்பந்தல் அமைத்தது. பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து சென்றனர்.
கோடை வெயில் சுட்டெரிப்பதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நான்கு ரதவீதியில் நிழல்தரும் பந்தல் இன்றி, வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திறந்தவெளியில் ஓடோடி செல்கின்றனர்.
இதுகுறித்து மார்ச் 14ல் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் காரணமாக நேற்று கோயில் நிர்வாகம் கிழக்கு ரதவீதியில் உள்ள நடைபாதையில் பந்தல் அமைத்து, தெற்கு ரதவீதி நடைபாதையில் நார் மேட் விரித்துள்ளனர். இதனால் பக்தர்கள் சிரமம்இன்றி ரதவீதியில் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
இதுபோல மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கோயில் நான்கு வீதி தார் சாலையில் நிழல் தரும் பந்தல்அமைக்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.

