sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்கூரை தயார் 'தினமலர்' செய்தி எதிரொலியாக

/

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்கூரை தயார் 'தினமலர்' செய்தி எதிரொலியாக

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்கூரை தயார் 'தினமலர்' செய்தி எதிரொலியாக

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்கூரை தயார் 'தினமலர்' செய்தி எதிரொலியாக


PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறை நகராட்சி அலுவலகம் முன், புதிதாக பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன்பாக இருந்த பயணியர் நிழற்கூரை, மூன்று ஆண்டுகளுக்கு முன் அலுவலக விரிவாக்க பணியின் போது இடிக்கப்பட்டது. இதனால் பயணியர் நிழற்கூரை இல்லாமல், பள்ளி மாணவர்கள், வெளியூர் செல்லும் பயணியர், திறந்தவெளியில் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.

அதனால், அதே இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தியும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில், 9.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன முறையில் பயணியர் நிழற்கூரை கட்டும் பணி நடக்கிறது.

நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''பயணியர் வசதிக்காக நகராட்சி அலுவலகத்தின் முன் நவீன முறையில் பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படும்.

இதே போல், சிறுகுன்றா, கவர்க்கல், வேவர்லி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளிலும் புதிதாக பயணியர் நிழற்கூரை கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது'' என்றார்.






      Dinamalar
      Follow us