/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ரோடுகள் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
/
ரோடுகள் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூன் 23, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தமுக்கம், கோரிப்பாளையம் மேம்பாலப்பணி நடப்பதால் அப்பகுதியில் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் சிரமமின்றி செல்ல துணை ரோடுகளை மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக செல்லுார், ஓ.சி.பி.எம்., பள்ளி, ஜம்புரோபுரம், எப்.எப்., ரோடு, இ 2 ரோடு, எச்.ஏ.கே.,ரோடு, பி.டி.ஆர்., 2வது தெரு, காமராஜர் 2வது தெரு, கோகலே ரோடு, அண்ணா பஸ் ஸ்டாண்ட், வைகை வடகரை, ஆசாரிதோப்பு, செனாய்நகர், மதிச்சியம் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ரோடு சீரமைப்பு பணி நடப்பதாக கமிஷனர் தினேஷ்குமார் தெரிவித்தார்.