PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : செமினிபட்டி கூத்தன் கண்மாயின் மடை உடைந்ததால் தண்ணீர் வெளியேறியது. அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், புதிய மடை அமைக்க ஒன்றிய பொதுநிதியில் ரூ.5 லட்சம் ஒதுக்கி பி.டி.ஓ., உலகநாதன் உத்தரவிட்டார்.