/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்
/
பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்
பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்
பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்
PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், தண்டரை புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த பயன்பாடற்ற குடிநீர் கிணறு இடித்து சமன்படுத்தப்பட்டது.
அச்சிறுபாக்கம் அடுத்த தண்டரை புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன், மாணவர்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் கிணறு வெட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.
நாளடைவில், குடிநீர் கிணறு பயன்பாடு இன்றி, பாழடைந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று, ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணறு இடித்து அகற்றப்பட்டு மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது.