/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு
PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

கடம்பத்துார்:நமது நாளிதழில் வெளியான செயதி எதிரொலியால் பயணியர் நிழற்குடையை சூழ்ந்திருந்த புதர்கள் அகற்றி சீரமைக்கப்பட்டது.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி.
இங்கிருந்து ஊராட்சிக்குட்பட்ட பாக்குபேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட பணயிர் நிழற்குடையை பயன்படுத்தி இப்பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.
இந்த நிழற்குடை புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் இருந்ததால் பயணியர் பயன்படுத்த முடியாமல் உள்ளதாக நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் பயணியர் நிழற்குடையில் சூழந்திருந்த புதர்களை அகற்றி சீரமைத்தனர்.