/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'தினமலர்' செய்தி எதிரொலி : குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
'தினமலர்' செய்தி எதிரொலி : குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி : குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி : குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

திருவள்ளூர்:'நமது நாளிதழ்' செய்தி எதிரொலியாக, ஜெ.ஜெ.கார்டர் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் ஜே.சி.பி., வாயிலாக வெளியேற்றும் பணி துவங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் அடுத்த சிறுவானுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம், போதுமான மழை நீர் கால்வாய் வசதியினை ஏற்படுத்தி தரவில்லை.
இதனால், மூன்ற நாட்களாக பெய்த மழையால், சாலைகள் மற்றும் வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. குடியிருப்புவாசிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தபடி சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து 'நமது நாளிதழில்' நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், நேற்று ஜே.சி.பி., வாயிலாக குடியிருப்பு பகுதியில் தேங்கிய வெளியேற்றும் பணியை துவக்கியுள்ளது.