sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் விடுவிப்பு

/

ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் விடுவிப்பு

ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் விடுவிப்பு

ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் விடுவிப்பு


PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் என, ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சிகளில், குடிநீர், தெரு விளக்கு, சாலை பராமரிப்பு, ஊராட்சி பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.

ஊராட்சி செயலர்களுக்கு, தமிழ்நாடு ஊராட்சிகள் எளிமைப்படுத்தப்பட்ட கணக்குகள் இணையதளத்தின் வாயிலாக, ஊதியம் வழங்கப்படுகிறது.

கடந்த மே மாதத்திற்கான ஊதியம், ஜூன் -15ம் தேதி வரையில் அந்தந்த ஊராட்சி, ஊதிய கணக்கிற்கு பணம் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஊராட்சி செயலர்கள் கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டி இருந்தது.

இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஊரக வளர்ச்சி துறையினர், நேற்று முன்தினம் இரவு, அனைத்து ஊராட்சிகளிலும் ஊதிய கணக்கிற்கு பணம் விடுவித்துள்ளனர்.

இந்த பணத்தின் வாயிலாக ஊராட்சி செயலர்கள் ஊதியம் பெற்றுள்ளனர் என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us