/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு
/
சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு
சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு
சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு
PUBLISHED ON : ஜன 28, 2026 06:40 AM

பவுஞ்சூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாலையை விரிவாக்கம் செய்யும் இடத்தில் இரும்பு தடுப்பு வைத்து, அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
பவுஞ்சூர் அருகே, ஆக்கிணாம்பட்டில் இருந்து சிறுவங்குணம் செல்லும் சாலையை, மாநில நெடுஞ்சாலை துறை விரிவாக்கம் செய்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிப்பு பதாகை, இரும்பு தடுப்பு வைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வந்தனர்.
எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலை விரிவாக்கம் குறித்து அறிவிப்பு பதாகை வைத்து, இரும்பு தடுப்பும் அமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
இதையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை விரிவாக்கம் செய்யும் பகுதியில் இரும்பு தடுப்பு வைத்து, அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

