PUBLISHED ON : மார் 14, 2026 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: மார்ச் 14-: திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பகுதியில் ரோட்டோரம் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வாகன ஓட்டிகளின் சிரமம் குறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் பேரூராட்சி பணியாளர்கள் உடனடியாக அப்பகுதியில் குப்பையை அகற்றினர். இதனால் குடியிருப்போர் நிம்மதி அடைந்தனர்.

