/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தண்ணீர்பந்தல் - ஆற்காடு சாலை அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
/
தண்ணீர்பந்தல் - ஆற்காடு சாலை அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
தண்ணீர்பந்தல் - ஆற்காடு சாலை அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
தண்ணீர்பந்தல் - ஆற்காடு சாலை அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
PUBLISHED ON : செப் 14, 2024 12:00 AM

செய்யூர்:செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் -ஆற்காடு இடையே செல்லும், 5 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.
இந்த சாலையை, சித்தாற்காடு, பாளையூர், தண்ணீர்பந்தல், வெடால், அமந்தங்கரணை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக, சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டு வந்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், 2022 - 23ம் ஆண்டு, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 87.75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், பாளையூர் முதல் தண்ணீர்பந்தல் சாலை வரை, 1.53 கி.மீ.,க்கு சீரமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பழைய சாலையில் இருந்த ஜல்லிக்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, சாலை பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், சாலையில் உள்ள ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் செல்லும் முதியவர்கள், ஜல்லிக்கற்களால் சறுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்பட்டன.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, கடந்த சில தினங்களுக்கு முன், சாலை அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.