/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கேட்பாரற்று நின்ற கார் அகற்றம்
/
கேட்பாரற்று நின்ற கார் அகற்றம்
PUBLISHED ON : பிப் 23, 2026 06:31 AM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் ஆற்றுப் பாலம் ரவுண்டானா அருகே பலநாட்களாக ரோட்டில் கேட்பாரற்று நிற்கும் கார் அடையாளம் காணப்பட்டு போலீசார் அகற்றினர்.
ஆற்றுப்பாலம் ரவுண்டானா அருகே கடந்த 20 நாட்களுக்கு மேலாகவே பழைய நம்பர் பிளேட் இல்லாத கார் நடு ரோட்டில் நின்றது.
கேட்பாரற்ற நிலையில் நிற்கும் காரால் இரவுநேரத்தில் இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் காரணமாக முதுகுளத்துார் போலீசார் சோதனை செய்து கார் சாவி இல்லாமல் இருந்துள்ளதாகவும் தற்போது மக்கள் உதவியுடன் ரோட்டோரத்தில் தள்ளி நிறுத்தி வைத்துள்ளனர்.

