sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, கொஞ்ச நாட்களாக, கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், ஒன்றும் பேசுவதில்லை. எந்த ஊரிலாவது, நான் ம.தி.மு.க.,வை சேர்ந்தவன் என்றோ, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் என்றோ சொன்னதில்லை. மாமல்லபுரம் தமிழ் சங்கத்தின் தலைவர் சத்யா என சொல்லி, ஏழெட்டு முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். என்னுடன் சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.

டவுட் தனபாலு: மல்லை சத்யா உங்களுக்கு துரோகம் செய்தாரோ, இல்லையோ தெரியாது... ஆனா, 'வரலாறு திரும்பும்'னு சொல்வாங்க... அந்த மாதிரி, 'ஸ்டாலினுக்காக என் மீது கொலை பழி சுமத்தி கட்சியை விட்டு கருணாநிதி வெளியேத்தினார்'னு நீங்க பலமுறை சொல்லியிருக்கீங்க... இப்ப, உங்க மகன் துரைக்காக, மல்லை சத்யா மீது நீங்க பாயுறீங்க என்பது மட்டும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!



பத்திரிகை செய்தி: தே.மு.தி.க., நிறுவனரான விஜயகாந்தின் ராசி எண், 5. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில், 23 சீட், தி.மு.க., கூட்டணியில், 14 சீட் கேட்டு, இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டவுட் தனபாலு: அது சரி... 'எங்க தலைவருக்கு, 5 தான் ராசியான எண்' என்று சொல்லி, கூட்டுத்தொகை, 5 வர்ற மாதிரி சீட்களை கேட்கிறாங்களா... தே.மு.தி.க., இப்ப இருக்கிற நிலைக்கு ரெண்டு கட்சிகளுமே, வெறும், 5 சீட்களை மட்டும் ஒதுக்க முன்வந்தாலே பெரிய விஷயம் என்பதில், 'டவுட்'டே இல்லை!





தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே, மது போதையால், 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். வள்ளியூரில், தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை நகைக்காக கொன்றுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை, எவருக்கும் பாதுகாப்பில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாததே, தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை!

டவுட் தனபாலு: முதல்வர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிற சம்பவங்களை நீங்க அரசியலுக்காக பெருசுபடுத்துறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!








      Dinamalar
      Follow us