sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

மதுக்கடையில் கொள்ளையடித்தவர் 'மட்டையானதால்' சிக்கினார்

/

மதுக்கடையில் கொள்ளையடித்தவர் 'மட்டையானதால்' சிக்கினார்

மதுக்கடையில் கொள்ளையடித்தவர் 'மட்டையானதால்' சிக்கினார்

மதுக்கடையில் கொள்ளையடித்தவர் 'மட்டையானதால்' சிக்கினார்


UPDATED : ஜன 01, 2025 04:36 AM

ADDED : ஜன 01, 2025 02:21 AM

Google News

UPDATED : ஜன 01, 2025 04:36 AM ADDED : ஜன 01, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: மதுக்கடையில் பணத்தை கொள்ளையடித்தவர், அங்கேயே புத்தாண்டை கொண்டாடியதால், மதுபோதையில் மயங்கி, போலீசில் சிக்கினார்.

தெலுங்கானாவின் மேதக் மாவட்டத்தில் உள்ள ஒரு மதுக்கடையை, நேற்று காலை கடை ஊழியர்கள் திறந்தனர். உள்ளே ஒருவர், மதுபோதையில் மயங்கி கிடந்தார். அருகே, பல காலி மது பாட்டில்கள் கிடந்தன. பணமும் இறைந்து கிடந்தன. உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முதல் நாள் இரவு 10:00 மணிக்கு கடையை மூடியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு திறந்துள்ளனர். இதற்குள் இரவில் அந்த மதுக்கடையின் மேற்கூரையை அகற்றி உள்ளே நுழைந்து, சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்து, பணத்தை கொள்ளையடித்து அழகாக மூட்டைக் கட்டி வைத்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன்பாக பெரிய தொகை கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் சுற்றிலும் மதுபாட்டில்கள் இருந்துள்ளது, அவருடைய ஆசையை துாண்டியது. பல மது பாட்டில்களை காலி செய்த அவர், மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 24 மணி நேரமாகியும் இன்னும் கண் முழிக்கவில்லை. போதை தெளிந்து, அவர் கண் முழித்தால் தான், அவர் யார் என்ற விபரம் தெரிய வரும் என, போலீசார் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us