sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்

/

பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்

பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்

பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்


UPDATED : ஆக 20, 2025 11:44 PM

ADDED : ஆக 20, 2025 11:32 PM

Google News

UPDATED : ஆக 20, 2025 11:44 PM ADDED : ஆக 20, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார், நாராயணன் நகரை சேர்ந்த 21 வயது பெண், பி.இ., படிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும், 21 வயது எலக்ட்ரீஷியனை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களை, ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர்.

அங்கு இருவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், அந்த பெண்ணிடம், 'மணமகன் உனக்கு சித்தப்பா உறவு முறை. அவருடன் திருமணம் வேண்டாம்' என கூறினர். எனினும், அதை ஏற்க, அந்த பெண் தயாராக இல்லை. போலீசாரும் அறிவுரை கூறிய போது, அந்த காதல் திருமண தம்பதி ஏற்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த போலீசார், 'கலிகாலம்... எப்படியோ போங்க...' என, கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us