sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

நெஞ்சு வலியால் தவித்த பயணியை இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

/

நெஞ்சு வலியால் தவித்த பயணியை இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

நெஞ்சு வலியால் தவித்த பயணியை இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

நெஞ்சு வலியால் தவித்த பயணியை இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

1


ADDED : ஜன 19, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நெஞ்சு வலி ஏற்பட்ட பயணியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர், 40 வயது நபர் கடந்த, 15ம் தேதி அரசு பஸ்ஸில்(தடம் எண் 1சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பஸ்ஸினுள் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இந்நிலையில், இவரை கண்டக்டர் ஆர்.எஸ்.புரத்தில் ரோடு ஓரமாக இறக்கி படுக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அந்நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நெஞ்சுவலி ஏற்பட்ட நபரை பாதி வழியில் இறக்கி விடப்பட்டது குறித்து கோவை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, கண்டக்டர் சரவணன், நெஞ்சு வலி ஏற்பட்ட நபர் மது அருந்தியிருந்ததாகவும், அதனால், அவரை இறக்கி விட்டதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் விசாரித்த போது பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கண்டக்டர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிரைவர் ஈசனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us