ADDED : ஜூலை 10, 2026 12:30 AM

திருப்பூர்: திருப்பூர், பல்லடம் சாலையை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம், 77. இவர், 'தினமலர்' நாளிதழின் பல ஆண்டு கால வாசகர். இவர், கடந்த மே 11ல் 'தினமலர்' ஆண்டு சந்தா, 2,499 ரூபாய் செலுத்தி, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தார்.
கடந்த ஜூன், 2ல் டூ - வீலரில் பல்லடம் - திருப்பூர் சாலையில், டி.கே.டி., மில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது நிலைத்தடுமாறி டூ - வீலருடன் விழுந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஆண்டு சந்தா செலுத்தியிருந்ததால், 'தினமலர்' அலுவலகத்தை தொடர்பு கொண்டார். 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவன அதிகாரிகள், மருத்துவ செலவுக்கான ஆவணங்களை சரிபார்த்து, காப்பீட்டு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் வழங்கினர்.
இக்கட்டான நேரத்தில், 'தினமலர்' நாளிதழ் வாயிலாக, இன்சூரன்ஸ் தொகை கிடைத்ததால், நம் வாசகர் ஜோதி ராமலிங்கம் பயன்பெற்றார்.
