sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்; திருப்புவனம் அருகே குவிந்த பக்தர்கள்

/

முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்; திருப்புவனம் அருகே குவிந்த பக்தர்கள்

முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்; திருப்புவனம் அருகே குவிந்த பக்தர்கள்

முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்; திருப்புவனம் அருகே குவிந்த பக்தர்கள்


ADDED : ஜன 03, 2026 12:30 AM

Google News

ADDED : ஜன 03, 2026 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள் படுக்கையில் பெண் சாமியார் நாகராணி அம்மையாரின் 62, சாமியாடி அருள் வாக்கு கூறிய தவக்கோலம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். முத்துமாரியம்மனுக்கு நாகராணி அம்மையார் 62, தினசரி பூஜை செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மண்டல பூஜை பிரசித்தி பெற்றது.

இந்தாண்டு மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று காலை முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9:00 முதல் சிறப்பு பூஜைகள் துவங்கின. மண்டல பூஜையை முன்னிட்டு மார்கழி 18 முதல் 45 நாட்கள் விரதமிருந்து நாகராணி அம்மையார் முள் படுக்கையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்தாண்டு பூஜைக்காக கோயில் முன் ஏழு அடி உயரத்தில் கத்தாழை, சப்பாத்தி கள்ளி, உடைமுள், கருவேல மர முள் உள்ளிட்டவைகளால் ஏழு அடி உயரத்திற்கு முள் படுக்கை தயார் செய்யப்பட்டது. நேற்று மதியம் 1:00 மணிக்கு நாகராணி அம்மையார் புனித நீராடி விநாயகரை வழிபட்ட பின் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோயிலை வலம் வந்தார்.

முள் படுக்கைக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டிய பின் பக்தர்களின் கோஷத்தின் இடையே நாகராணி அம்மையார் முள் படுக்கையில் ஏறி சாமியாடி அருள் வாக்கு சொல்வார். திருப்புவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நாகராணி அம்மையார் முள்படுக்கையில் தவம் செய்வதை காண குவிந்தனர்.






      Dinamalar
      Follow us