தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ மத பிரசாரம் செய்தவருக்கு விபூதி பூசிய ஹிந்து கைது

 மத பிரசாரம் செய்தவருக்கு விபூதி பூசிய ஹிந்து கைது

 மத பிரசாரம் செய்தவருக்கு விபூதி பூசிய ஹிந்து கைது


ADDED : பிப் 05, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன், 66. இவர் சுற்று வட்டார பகுதிகளில், இஸ்லாமிய மதம் சார்ந்த நோட்டீஸ் கொடுத்து, மத பிரசாரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த பிப்., 2ல் பெரம்பூர் போலீஸ் சரகம் பண்டாரவடையில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெருவில் நோட்டீஸ் கொடுத்து பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த, வழுவூரை சேர்ந்த ஹிந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதிகுமரன், 48. என்பவர் ஷேக் அலாவுதீனின், மத பிரசாரத்தை தடுத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அப்போது, ஜோதி குமரன் திடீரென ஷேக் அலாவுதீன் அணிந்திருந்த தொப்பியை கழற்றி, நெற்றியில் விபூதியை பூசி, காவி துண்டை கழுத்தில் அணிவித்து, ஹிந்து மதத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும் என கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரு தரப்பினரும், பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஷேக் அலாவுதீன் புகாரில், ஆறு பிரிவுகளின் கீழ், ஹிந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதி குமரனை போலீசார் கைது செய்தனர்.

மத பிரசாரம் செய்த, ஷேக் அலாவுதீன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத போலீசார், ஒரு தலைபட்சமாக, ஜோதி குமரனை மட்டும் கைது செய்திருப்பது, மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us