/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்
/
ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்
ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்
ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்
ADDED : ஆக 21, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காங்கயத்தில் வாக்கிங் சென்றபோது கிடந்த தங்க செயினை போலீஸ்காரர் கண்டறிந்து, ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பாலுசாமி, 32 என்பவர் பணியாற்றி வந்தார். காங்கயம் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக உள்ளார். நேற்று காலை காங்கயம் - பழைய கோட்டை ரோட்டில் வாக்கிங் சென்றபோது,ஒரு சவரன் தங்க செயினை கண்டெடுத்தார். யாரும் உரிமை கோரவில்லை.
காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கபில்தேவிடம் ஒப்படைத்தார். நகையை தவற விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். போலீசாரின் நேர்மையை எஸ்.பி., - ஏ.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்.