sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

கணவருக்கு சரமாரி கத்திக்குத்து; 'சாட்டிங்' மோக மனைவி கைது

/

கணவருக்கு சரமாரி கத்திக்குத்து; 'சாட்டிங்' மோக மனைவி கைது

கணவருக்கு சரமாரி கத்திக்குத்து; 'சாட்டிங்' மோக மனைவி கைது

கணவருக்கு சரமாரி கத்திக்குத்து; 'சாட்டிங்' மோக மனைவி கைது

2


ADDED : ஏப் 28, 2025 06:47 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:47 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'மொபைல் போனில் மூழ்கியிருக்க வேண்டாம்' என கண்டித்த கணவரை, கத்தியால் குத்திய மனைவி கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம், விஜயபுரா நகரின் ஆலகுன்டே நகரில் வசிப்பவர் அஜித் ரத்தோட், 30; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி தேஜு, 27. இவர், மொபைல் போனுக்கு அடிமையானவர். வீட்டை கவனிக்காமல், எந்த நேரமும் 'சாட்டிங்' செய்து பொழுது போக்குவார்.

கணவர் பல முறை அறிவுரை கூறியும் பலன் இல்லை. தினமும் சாட்டிங்கில் இருந்ததால், மனைவிக்கு வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு இருக்கலாம் என அஜித் சந்தேகம் அடைந்தார்.

இது குறித்து கேட்டால், தேஜு பதில் அளிக்காமல் சண்டை போட்டுள்ளார். இதனால் கணவரின் சந்தேகம் அதிகமானது. நேற்று முன்தினம் நள்ளிரவும் தேஜு மொபைல் போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்தார். கோபம் அடைந்த அஜித், 'யாருடன் சாட்டிங் செய்கிறாய்; பதில் சொல்' என விசாரித்தார்.

ஆனால், தேஜு பதில் அளிக்கவில்லை. நீண்ட நேரம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அதன்பின் அஜித் உறக்கத்தில் ஆழ்ந்தார். அவரது மனைவியின் கோபம் குறையவில்லை. அதிகாலை 3:00 மணியளவில், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, கணவர் அஜித்தின் கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக குத்தினார்.

அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் உள்ளே வந்து பார்த்தனர். ரத்தக் காயங்களுடன் கிடந்த அஜித்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆதர்ஷா நகர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். தேஜுவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us