sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு

குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு

குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு


ADDED : ஜூலை 29, 2022 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2022 12:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்துப்பட்டு :சேத்துப்பட்டு அருகே, குழந்தை வரம் வேண்டி பெண்கள், மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமிகளின், 186வது குருபூஜை விழா, ஆடி அமாவாசையன்றுநடப்பது வழக்கம்.அதன்படி நேற்று நடந்த விழாவில், குழந்தை

பாக்கியம் இல்லாத ஏராளமான பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர்.பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சாதுக்கள் வழங்க, அதை பெண்கள் சேலை மடியில் பெற்று, அங்குள்ள குளக்கரையில் வைத்து, கைகளை பின்புறம் கட்டியவாறு மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டனர்.

இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இங்கு வழிபாடு நடத்தி, குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பணம், தானியம் உள்ளிட்ட பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us